Thursday, December 10, 2015

பாரதி போற்றுதும்



அதிசயம் பாரதிசயம்* பார்!!  பாரதிர** வரும் முரசவன்பா
மறந்தனள் தன்னிடம் பூவினிலேயென அமர்ந்தனள் பாரதி*** நாவினிலே
பொழிந்தனன் பாரதி கவிமழையை அடிமைத்தனமும் கீழ்நிலையும்
விதியெனநம்பாரதிவிரைவாய்**** மதியொடு களம்புகத்தான் துணிந்தார்
இயற்றினன் காவியக் காதல்பா ரதிமதனும்தான்***** மயங்கிடுவார்
போற்றினான் கண்ணனை பலஉருவாய்; ஏற்றினான் பெண்மையை விழித்தெழவே;
தூற்றினான் பொய்மையை அழிந்தொழிய; மாற்றினான் மடமையை சிறுமதியை;
ஆற்றினான் பெருந்தொண்டு மாந்தர்க்கு; போற்றுவோம் நாம்பெற்ற பாரதியை

*அதிசயம் பார்+அதிசயம் பார்
** பார்+அதிர வரும முரசு அவன் பா
***பாரதி - கலைமகள், சரஸ்வதி
**** விதியென நம்பார்+அதிவிரைவாய்
***** காதல்பா+ரதிமதனும் தான் 

No comments:

Post a Comment