Thursday, June 18, 2015

சற்குரு - தாத்தா - 9

சற்குரு - தாத்தா - 9



கற்றதும் பெற்றதும் ஆயிரம் உண்டுகாண்-நீ

உற்றதும் உணர்ந்ததும் உணர்ந்திடச் செய்ததும்

சுற்றமது உயர்ந்திட சுப்பன்வழி வந்ததும்

பெற்றவரின் அருளை - நின்கருணை நிதியெனவே

உற்றாரும் உடையாரும் உய்த்திட ஈந்ததும்

செற்றம் செருக்கடக்க படைமுனையில் நின்றதும்

குற்றமற குருவாகி குலம்காத்து நின்றதும் 

கற்றவரின் கருத்தினிலே கருவாகிக் கலந்ததும்

மற்றவரும் போற்றிடவே வாழ்வாங்கு வாழ்ந்ததும்

பற்றதுவும் நீங்கிவிட மாயையாம் பவவினைகள்

அற்றதும் அகன்றதும் அரனடியை சேர்ந்ததும்

கற்றாவின் மனம்போலக் கசிந்துருகி யாம் மனத்-துணுக்

குற்றதும், "துயர்வேண்டாம்! உடனிருக்கும் 

வெற்றிவேல்! துணையிருக்கும் சக்திவேல்!!

தொற்றிவரும் துயரனைத்தும் விட்டகலும் வேல்முனையில்! அவனைப்

பற்றிடுக பாடிடுக பகல்விடியும் இருள்முடியும்!!"என

முற்றிலும் பயம்விலக்கி எமையாளும்

பெற்றவனே உற்றவனே கொற்றவனே 

சிற்றறிவுக்கெட்டியவரை சிறுவிரலால் எழுதுகிறோம் - சீரியநின் சிறப்பை...

முந்தைய பதிவு (8)

அடுத்த பதிவு (10)

No comments:

Post a Comment