Tuesday, June 9, 2020

ஏகா (தனியே)




இப்பாடலை முதன் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் போஸ் (Bose - the forgotten hero) இந்தித் திரைப்படத்தில் கேட்டேன். வங்காள மொழியில் வரும் முதல் இரு வரிகள் மட்டும் ரவீந்திரநாத் தாகூர் எழுதியவை என்றறிந்து முழுப் பாடலைத் தேடிய போது கிஷோர் குமார் பாடிய இப்பாடல் கிடைத்தது. இது ஹேமந்த் முகோபாத்யாய் இசையில் வெளியான பாடல்.

https://youtu.be/Pmzvr3aZXQc

வங்காள மொழியின் இசைநயம், நதியின் இசைவிலே பிறந்ததென்று தோன்றுவது. நதியின் தளும்பல்கள் பேசிக் கொள்ளும் மொழி, அதில் அலைப்புறும் படகுகள் பேசிக் கொள்ளும் மொழி. அந்த நீரின் அலைவு இப்பாடலின் இசையில் ஒலிக்கிறது.

பின்னர் வித்யா பாலன் நடித்த கஹானி படத்தில் அமிதாப்பச்சனின் ஆழ்ந்த குரலில் இந்தப் பாடலைக் கேட்ட போது இன்னும் மனதுக்கு அணுக்கமானது இப்பாடல்.

Jodi tor dak shune keu na ashe tobe Ekla cholo re,
Tobe Ekla cholo, Ekla cholo, Ekla cholo, Ekla cholo re

Jodi keu kotha na koe, ore ore o obhaga,keu kothana koi
Jodi shobai thake mukh phiraee shobai kore bhoe,
Tobe poran khule
O tui mukh phute tor moner kotha Ekla bolo re.

Jodi shobai phire jae, ore ore o obhaga,shobai phire jai
Jodi gohon pothe jabar kale keu phire na chae,
jodi gohon pothe jabar kale keu phire naa chaai—
Tobe pother kata
O tui roktomakha chorontole ekla dolo re

Jodi alo na dhore, ore ore o obhaga,
Jodi jhor-badole adhar rate duar dee ghore -
Tobe bojranole
Apon buker pajor jalie nie ekla jolo re.
Jodi tor dak shune keu na ashe tobe ekla cholo re


உனது அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனினும்
தனியே நடை போடு!!
தனியே நட! முன்னேறு! சென்று கொண்டே இரு!!

உன்னோடு பேச யாரும் துணியவில்லை எனினும்,
வாய்மூடி அனைவரும் முகம்திருப்பி கொண்டாலும்,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
தயக்கமின்றி திறந்தமனதோடு
உனது சொற்களை உரக்கப் பேசு!!

உனைவிட்டு அனைவரும் அகன்று சென்ற போதிலும்,
நீ செல்லும் அறியமுடியாத பாதையை பின்தொடர யாருமில்லையெனினும் ,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
பாதையின் முட்கள் ஏறி சிவந்த பாதங்களோடேனும்
தனியாக நடைபோடு!!

உன் பாதையின் விளக்கு அணைந்து போயினும்,
காரிருள் இடிபுயலை உன் வாசலுக்கு அழைத்து வந்தாலும்,
நீ கைவிடப்பட்டவன் அல்ல!!
மின்னல் உன்னில் ஒளியேற்ற,. நீயே பாதையின் ஒளியாக
தனியாக நடைபோடு!!
---------
வார்த்தைக்கு வார்த்தை இதை மொழிபெயர்க்கவில்லை. உதாரணமாக 'ஓ அபோகா' என்ற விளி அபாக்கியவானே, துரதிருஷ்டசாலியே என்று நேரடியாக பொருள் கொடுக்கிறார்கள், எனில் பாடலின் தொனி குறிப்பிடுவது 'கைவிடப்பட்டவன் அல்ல நீ' என்றே என்பதால் இவ்விதம் எழுதியிருக்கிறேன்.

"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை " என்ற பாரதியின் வரிகளுக்கிணையான ஒரு பாடல்.


இப்பாடலை 1906'ல் பண்டார் இதழில் ஏகா என்ற தலைப்பில் தாகூர் எழுதியிருக்கிறார். காந்திக்கு மிகவும் பிடித்த பாடல் என்று வாசித்திருக்கிறேன். எனக்கும்தான்.

அவரது அகக்குரலென்றே ஒலிக்கிறது இதன் வரிகள். முதல் வழி உருவாகும் பாதை, முதல் காலடிகள் செல்லும் பாதை என்றும் முட்கள் நிறைந்ததே, தனிமை மட்டுமே துணை வருவது. எனில் தொடர்ந்து நடந்துவிட பாதை உருவாகி வரும். "பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்"

மற்ற பாடல்கள்:
அமிதாப் பச்சன் குரலில், விஷால் சேகர் இசையில் கஹானி திரைப்படப் பாடல்
https://youtu.be/-d9QOzkxMKU

சோனு நிகாம் குரலில், ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் சுபாஷ் சந்திர போஸ் படப்பாடல் (இரு வரிகள்)
https://youtu.be/xO-xmHRd6cc




No comments:

Post a Comment