Wednesday, February 10, 2016

தொலையும் வரை தேடு

 யாரோ சொல்லிப்போன 
சொற்களில் தேடாதே
என் விதையாம் கவிதைகளை
நிழலில் ஒளிதேடி
நிறமில்லை என்னாதே
நன்றாகத் தேடிப்பார்
தொலையும்வரை கிட்டும்வரை
அன்றொருநாள்
குடைதேடிக் கவிகள்
கூரையுள் புகும்போது
நனைந்தபடி கவிதை
மழையோடு போனது
அன்றும் ஒருநாள்
சந்தையடி சந்தடியில்
நடமாட இடமின்றி
அஞ்சுவதஞ்சிக் காணாமல்போன
பஞ்சுமிட்டாய் பொம்மையுடன்
தோளேறிப் போனது
இன்றும் அன்றுதானோ
என்றும் இன்றுதானோ
எங்கேயோ வழிதவறி
சொற்காட்டில் சிக்கி
திக்குத்தெரியாமல்
மயங்கி நிற்கலாம்
அந்தமயக்க விதை
சித்தமோ சிவன்போக்கு
நித்தமும் நீள்வாக்கு
நடந்த தடம் காணாது
மேகம்போல் கடந்துவிடும்
எங்கேனும் எவரேனும்
கண்ணால் கண்டுகொண்டால்
கண்டவர் அக்கணமே
காணாமல் போகுங்கால்
பிழைத்திருக்கக் கூடும்
பிழையாத என் கவிதை!!


No comments:

Post a Comment