Wednesday, February 10, 2016

இலையுதிர மனமதிர..

ஏதோ நினைவுகளில்
மரத்தின் பெருமூச்சு
சருகாய் உதிர்கிறது
கண்ணீரோடு எழுந்து சென்ற
யாரோ ஒருவனுக்கு
ஆறுதல் சொல்ல
முகவரி சுமந்த முதிர்இலைகள்
மெல்லப் புரள்கின்றன
அவன் காலடித் தடம்தேடி..
துரத்திப் பிடிப்பவை என்றுமே
தொலைந்த இடம்தாண்டி
வெகுதொலைவு சென்றிருக்கும்
அடுத்த கவலைக்கு அவசரமாய் அவன்நடக்க
மிதித்த காலடியில்
நொறுங்குகிறது சருகு
இன்னொரு பெருமூச்சை
உதிர்க்கிறது மரம்

No comments:

Post a Comment